மீண்டும் சினிமாவில் ஜோதிகா!

மீண்டும் சினிமாவில் ஜோதிகா!

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. அஜீத் நடித்த அப்படத்தில் சிம்ரன் முக்கிய நாயகியாக நடிக்க, செகண்ட் ஹீரோயினாக ஜோதிகா நடித்தார். அதையடுத்து அதே எஸ்.ஜே.சூர்யா, தான் இயக்கிய குஷி படத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக்கினார். இப்படியாக பர்பாமென்சுக்கு முக்கியத்துவமுள்ள படங்களாக நடித்த ஜோதிகா, கமலுடன் தெனாலி, ரஜினியுடன் சந்திரமுகி வரை ஒரு கலக்கு கலக்கினார்.

பின்னர் தான் பல வருடங்களாக காதலித்து வந்த சூர்யாவை திருமணம் செய்து கொண்டு, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகியிருந்தார். இந்த நேரத்தில், சூர்யாவுடன் சில விளம்பர படங்களில் நடித்த ஜோதிகாவுக்கு, திருமணத்துக்குப்பிறகு சிம்ரன், சினேகா உள்ளிட்ட சில நடிகைகள் நடிப்பதைப்பார்த்து மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை தலைதூக்கியுள்ளதாம்.

இதுபற்றி அவர் சூர்யாவிடம் சொன்னபோது, அவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டி விட்டாராம். அதனால், முன்பு மாதிரி ஹீரோக்களுடன் டூயட் பாடாமல், வித்தியாசமான கேரக்டர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார் ஜோதிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook