பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர்

பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் ‘நாய்’ மனிதனாக மாறிய பிரேசில் இளைஞர்

பிரேசிலியா: நாயின் சாயல் சிறிதளவு இருந்ததாலும், நாய்கள் மீது கொண்ட தீரா காதலாலும் ஒரு பீரேசீலிய இளைஞன் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை நிஜ நாய் போலவே மாற்றிக் கொண்ட விநோதம் நடந்துள்ளது. பெயர் வெளியிடப்படாத பிரேசிலைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு மருத்துவர்கள், இறந்த நாயின் முகத்தைக் கொண்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனராம். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மருத்துவர்களுக்கு வழங்கியுள்ளாராம் அந்த இளைஞர். இறந்த நாய் ஒன்றின் காது, மூக்கு, வாய் மற்றும் புருவங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த இளைஞருக்கு பொருத்தியுள்ளார்களாம் மருத்துவர்கள். ஆபரேஷன் முடிவடைந்துள்ள நிலையில் அந்த இளைஞனை ‘நாய் மனிதன்’ என அழைக்கின்றனர் மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook