ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம் இன்று நடந்தது!

ஜிவி பிரகாஷ் – சைந்தவி திருமணம் இன்று நடந்தது!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடந்தது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர்.

அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம். ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சைந்தவிக்கு மோதிரம் அணிவித்தார் ஜிவி பிரகாஷ்.

இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவருமே திருமணத்துக்கு வந்திருந்தனர்.

இன்று மாலை இதே அரங்கில் மணமக்களுக்கு திருமண வரவேற்பு விமரிசையாக நடக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook