தற்கொலைக்கு முயன்ற பெண்: காப்பாற்றிய டீ கடைக்காரர்

தற்கொலைக்கு முயன்ற பெண்: காப்பாற்றிய டீ கடைக்காரர்

கொடைக்கானல்: கொடைக்கானல் பசுமைப்பள்ளத்தாக்கில், தற்கொலை செய்ய முயன்ற, சென்னை பெண் மேகாவை, டீ கடைக்காரர் ராஜா காப்பாற்றினார். சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியர் புவனேஷ் ஆச்சா, 24; மனைவி மேகா, 24. திருமணமாகி ஓராண்டாகிறது. மூன்று மாத குழந்தை உள்ளது.

தற்கொலை முயற்சி: கொடைக்கானலுக்கு, ஜூன் 6, காலை 6 மணிக்கு, பஸ்சில் வந்த மேகா, “கோக்கர்ஸ் வாக்’ முன், டீ கடை வைத்துள்ள ராஜாவிடம், பசுமைப்பள்ளத்தாக்கிற்கு வழி கேட்டுள்ளார். சந்தேகமடைந்த ராஜா, மேகாவிடம் விசாரித்தார். தற்கொலை செய்யும் எண்ணத்தில், மேகா இருந்தது தெரிந்தது. அவரை, கொடைக்கானல் போலீசில், ராஜா ஒப்படைத்தார். மேகாவின் குடும்பத்திற்கு, தகவல் தரப்பட்டது.
எச்சரிக்கை: போலீஸ் விசாரணையில், கணவர் குடும்பத்தினர் கொடுமைபடுத்தியதாக, கூறினார். மேகாவை, நன்கு கவனித்துக்கொள்ளும்படி, கணவருக்கு அறிவுரை கூறிய, போலீசார், “தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது’ என, மேகாவை, எச்சரித்து அனுப்பினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook