வெடிகுண்டு வீசியவர் திண்டுக்கல்லில் கைது

வெடிகுண்டு வீசியவர் திண்டுக்கல்லில் கைது

திண்டுக்கல்: திருநெல்வேலியை சேர்ந்தவர் அதிசயப்பாண்டி,37. படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியனின் ஆதரவாளர். பசுபதி பாண்டியன் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கொலை செய்வதற்காக, கடந்த 27.9.12ல் திண்டுக்கல் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் வெடி குண்டை பதுக்கி வைத்திருந்தார். இந்த குண்டு வெடித்து சிதறி, கடை நொறுங்கியது. பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, கடந்த 24.12.12ல் திண்டுக்கல்லில் காரில் இருந்த, ஒன்றிய கவுன்சிலர் முத்துப்பாண்டியை கொலை செய்ய வெடிகுண்டு வீசியுள்ளார். கடந்த 27.3.13ல், திண்டுக்கல்லில் முத்துப்பாண்டி கோர்ட்டை விட்டு வெளியே வந்த போது, வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றுள்ளார். இவ்வழக்கில் போலீசார், அதிசயப்பாண்டியை தேடி வந்தனர். திண்டுக்கல்லில், ஆட்டோ டிரைவர் அந்தோணியிடம் நூறு ரூபாயை பறித்து கொண்டு ஓட முயன்ற இவரை, இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், வாசுதேவன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook