பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள்

பேஸ்புக் காதலால் சீரழியும் மாணவர்கள்

ஓசூர் : பேஸ்புக் காதல் விவகாரத்தில், ஓசூரில், ஆறே மாதத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் உள்ளிட்ட, 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஓசூர், தனியார் கல்லூரி மாணவர் ராகவ், 22, பேஸ்புக் காதல் விவகாரத்தில் சிக்கினார். உடன் படிக்கும் மாணவர்கள், பிரவீன், பிரதாப் சச்சின் ஆகியோர், கடந்த, 6ம் தேதி, இவரை, கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பேஸ்புக் மூலம், பிரவீன் காதலியை, ராகவ் வசியப்படுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரமே, இந்த கொலைக்கு காரணம் என, போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதே போல், 2012 டிச., 26 ல், ஓசூர், ராயக்கோட்டை, ஹட்கோவை சேர்ந்த செல்வம், 24, என்பவரும், பேஸ்புக் காதல் விவகாரத்தில், படுகொலை செய்யப்பட்டார். ஒரு பெண்ணுக்கு, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து, பேஸ்புக்கில், தகவல் அனுப்பியுள்ளார்.இதை, அந்த பெண், தன் காதலன், அர்ஜுனிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அர்ஜுன், நண்பர்களுடன், செல்வத்தை கொலை செய்துள்ளார்.

பேஸ்புக் காதல் தகராறுகளால், கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள், அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். விவகாரம் வெளியே தெரியாமல், போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர்.சில குறும்புக்கார இளைஞர்கள், பேஸ்புக்கில், தங்களை பெண்கள் போல் பாவித்து, மற்ற மாணவியர் படங்களை, மார்பிங் செய்து, கிளுகிளுப்பு குறுந்தகவல்கள், படங்கள் அனுப்பி குறும்பு செய்கிறார்; இன்னும் ஒருபடி மேலே போய், காதலிப்பது போல், மோசடி செய்வதும் நடக்கிறது.

“பேஸ்புக் பற்றி, மாணவர்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connect with Facebook